நாம் எடுக்கும் மொத்த பிறவிக் கணக்கை, ஓர் ஏணியுடன் ஒப்பிடலாம்.
சத்யுகத்தில் தேவதைகள், 8 பிறவிகள் மற்றும் 16 கலை சம்பூர்ணமானவராய் இருந்தனர். நாம் 100% தூய்மையாக இருக்கின்றோம்.
திரேதா யுகத்தில் நமது தூய்மை 25% குறைகின்ற காரணத்தால் 14 கலைகள் நிறைந்தவர்களாகவும் 12 பிறவிகள் எடுப்பவர்களாகவும் ஆகின்றோம்.
துவாபரயுகத்தில் 50% தூய்மைத் தன்மை குறைந்து விடுவதால் நிச்சயமற்ற ஆயுட்காலதுடன் 21 பிறவிகளை எடுக்கின்றனர். இங்கே தான் பக்தி, வழிபாடுகள் ஆரம்பமாகிறது.
கடைசி யுகமான கலியுகத்தில் முற்றிலும் தூய்மையை இழப்பதால் குணங்கள் மற்றும் கலைகள் அனைத்தையும் இழக்கின்றோம். இங்குதான் அகால மரணங்களும் துக்கமும் அதிகமாக ஏற்படுகின்றது. இங்கு மொத்தம் 42 பிறவிகள் எடுக்கின்றார்.
கலியுக இறுதியில் பரமாத்மா சிவன் இவ்வுலகில் பிரம்மா உடலில் பரகாய பிரவேசம் செய்து அவரது கமல வாய் மூலம் இராஜ யோகத்தை கற்பித்து ஓர் புதுப் பிறவி கொடுக்கின்றார். இது ஒரு வைரத்திற்குச் சமமான பிறவியாகும்.