யோகம் என்றால் தொடர்பு; இராஜ என்றால் யோகங்களிலும் இது மேலானது. தனது மனதை பரமாத்மாவுடன் இணைப்பதே யோகம் ஆகும். இதன் மூலம் இறை சக்தி ஆத்மாவிற்குள் நிறைகின்றது.
இராஜ யோகத்தினால் கிடைக்கும் சக்திகள்
- அனைவரின் பாகத்தையும் புரிந்து கொள்வதால் சகித்துக் கொள்ளும்
சக்தி அதிகரிக்கிறது. - அனைவரின் பலவீனங்களையும் மற்றும் தன்னுடைய குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் சக்தியை அடைகிறோம்.
- சரி எது தவறு எது என்பதை பகுத்தறியும் சக்தியைத் தருகிறது.
- சரியான முடிவு எடுக்கும், தீர்மானிக்கும் சக்தி அதிகரிக்கிறது.
- துன்பங்கள், உறவினர்களின் மரணம், உடல் நோய்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கிறது.
- ஒன்றுபட்டு இருக்கும், ஒத்துழைக்கும் சக்தியைத் தருகிறது.
- ஐம்புலன்களை அடக்கும் சக்தியைத் தருகிறது.
- மரணத்தை கண்டு பயப்படாமல், எப்போதும் தயாராக இருக்கும்
சக்தியை அடைகிறோம்.
இந்த சக்திகள் அனைத்தும் கலியுகத்திலும் வெற்றிகரமான மற்றும்
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் உதவுகின்றது.