யோகம் என்றால் தொடர்பு; இராஜ என்றால் யோகங்களிலும் இது மேலானது. தனது மனதை பரமாத்மாவுடன் இணைப்பதே யோகம் ஆகும். இதன் மூலம் இறை சக்தி ஆத்மாவிற்குள் நிறைகின்றது.
இராஜ யோகத்தினால் கிடைக்கும் சக்திகள்

  1. அனைவரின் பாகத்தையும் புரிந்து கொள்வதால் சகித்துக் கொள்ளும்
    சக்தி அதிகரிக்கிறது.
  2. அனைவரின் பலவீனங்களையும் மற்றும் தன்னுடைய குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் சக்தியை அடைகிறோம்.
  3. சரி எது தவறு எது என்பதை பகுத்தறியும் சக்தியைத் தருகிறது.
  4. சரியான முடிவு எடுக்கும், தீர்மானிக்கும் சக்தி அதிகரிக்கிறது.
  5. துன்பங்கள், உறவினர்களின் மரணம், உடல் நோய்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கிறது.
  6. ஒன்றுபட்டு இருக்கும், ஒத்துழைக்கும் சக்தியைத் தருகிறது.
  7. ஐம்புலன்களை அடக்கும் சக்தியைத் தருகிறது.
  8. மரணத்தை கண்டு பயப்படாமல், எப்போதும் தயாராக இருக்கும்
    சக்தியை அடைகிறோம்.
    இந்த சக்திகள் அனைத்தும் கலியுகத்திலும் வெற்றிகரமான மற்றும்
    மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் உதவுகின்றது.

அடுத்த படத்தை பார்க்க

மேலும் தகவல்களுக்கு