நேரம் கடத்துதல் (Time Pass)
– பி.கு. வள்ளிமயில், பிரம்மா குமாரிகள், மதுரை இரயில் நிலையத்தில் நான்கு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேசும் விஷயங்களில் சாரம் ஒன்றுமே இல்லை. அர்த்தமற்றதாக இருந்தது. அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் செல்ல வேண்டிய இரயில் வந்து விட்டது. பேச்சில் மூழ்கியிருந்த நால்வரும் இரயில் வந்ததை கவனிக்கவே இல்லை. அவர்கள் பேச்சில் எந்த உருப்படியான விஷயமும்இல்லை. சிறிது நேரத்தில் இரயில் கிளம்புவதற்கான விசிலும் அடித்துவிட்டது. அப்போதும் கூட நால்வரும் அசையாமல் அதே நிலையில் பேசிக்கொண்டிருந்தனர். வண்டி
- Published in Article – By Points
சுற்றும் மனதினை கொஞ்சம் நிறுத்தி….
பி.கு. வள்ளிமயில், பிரம்மா குமாரிகள், மதுரை மானிட வர்க்கத்தின் மகத்தான ஆற்றல் ” மனோ சக்தி”. ஆதிகால சித்தர்கள் முதல் இன்றைய அறிவியலார்கள் வரை இன்றளவும் விளக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று மனம்! மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். என்று அக்காலத்திலேயே கூறிவிட்டனர். இன்றோ இந்த மனதிற்கு அறிவியல் ஒரு தனி இடத்தையளித்து உளவியல் என பெயர் சூட்டிவிட்டது. இத்தகைய பலம் மிக்க மனம் சதா சர்வ காலமும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த பழைய துக்கம் நிறைந்த
- Published in Article – By Points
ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்
சமூக ஆரோக்கியம்: சமூக ஆரோக்கியம் அன்பு அமைதி மற்றும் நல்லிணக்கமான சூழ்நிலைகளை உருவாக்க ஒருவருக்கு சமூக ஆரோக்கியம் மிகவும் அவசியமானதாகும். சமூக ஆரோக்கியம் பெற்ற மனிதன் தன் தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்கின்றான். குழந்தையைப் பராமரிப்பதில் தேவையான கவனம் செலுத்துகின்றான். அமைதியான மேலும் மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்க திட்டமிடுவதில் ஒத்துழைப்பு தருகின்றான். திருப்தியான நிலையான நட்பை வளர்க்கின்றான். சமுதாயத்திற்கு ஏற்படும் சேதம் உண்டாவதை தவிர்க்கின்றான். கூடவே தன் சக மக்களுக்கு ஆன்மீக சேவையும்
- Published in Article – By Points
ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம் !
நீங்கள் அமைதியான, சுகம் நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை அனுபவம் செய்கின்றீர்களா? நீங்கள் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயனுடையவராக இருக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இலட்சியப் பாதையில் பிறழாது சென்று கொண்டிருக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் சுய வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திலும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றீர்களா? நீங்கள்… இக்கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு இல்லை என்ற பதில் வருமானால்? இத்தொடரை தொடர்ந்து படியுங்கள்! வாழ்வில் வளம் பல பெற்று வாழுங்கள்!!
- Published in Article – By Points
ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்
இராஜயோகமும் மூளையும் : விழிப்புணர்விற்கு ஏற்ப நமது மூளையானது நான்கு விதமான கதிர்களை உற்பத்தி செய்கின்றது. 1.ஆல்பா கதிர்கள் (Alpha Waves) வினாடிக்கு 8 முதல் 12 கதிர்கள் வரை வெளிப்படுகின்றது. இக்கதிர்கள் வேகம் வாய்ந்தவை. அதிக மின்சக்தி கொண்டது. விழிப்புடனும் அதே சமயம் கண்மூடி ஓய்வுடன் இருக்கும் பொழுதும் வெளிப்படுவது. 2.பீட்டா கதிர்கள் (Beta Waves) வினாடிக்கு 13க்கும் மேல் வெளிப்படுகின்றது. இதுவும் அதிக வேகம் வாய்ந்தவைதான். குறைந்த மின் சக்தி கொண்டது. சுறுசுறுப்பாக இருக்கும்
- Published in Article – By Points
கடவுள் – தாயுமானவன் !
மகன் :கடவுளை நம்புறீங்களா, அப்பா? தந்தை :ஆமாம், நம்புறேன். மகன் :அவரை பார்த்திருக்கீங்களா, சந்திச்சிருக்கீங்களா ? தந்தை :இல்லப்பா. மகன் :பிறகு எதைவச்சு அவரை நம்புறீங்க ? தந்தை :ரிஷிகள் கடவுள் இருக்கிறார்ன்னு எழுதிவைச்சிருக்காங்க. மகன் :அவங்க அவரை பார்த்திருக்காங்களா, இல்ல சந்திச்சிருக்காங்களா? தந்தை :எனக்கு தெரியலை. மகன் :அப்பா, நான் கடவுளைப் பத்தி தெரிஞ்சுகணும். அவரப் பத்தி ஏதாவது சொல்றீங்களா . தந்தை :கடவுள் தான் நம் எல்லாருக்கும் அப்பா.
- Published in Article – By Points
அன்பு என்பது உண்மையில் மகாசக்தி. அது நம்மை மிக உயரத்துக்கு எடுத்துச் சென்று இலேசாகவும்,காற்றுப்போலவும் ஆக்கிவிடும். எனினும் இதுதான் மிகவும் தவறுதலாக துஷ்பிரயோகம் செய்யப்படும்சக்தி. அன்புக்காக பல தரங்குறைந்த செயல்கள் இடம் பெறுகின்றன. இப்போது உலகிற்குத் தேவை அன்பு. இனிமையான அன்பு என்று ஒரு பிரபலமான பாடல் கூறுகின்றது.உலகிற்கு உண்மையிலேயே தேவைப்படுவது என்னவெனில் அன்பைப்பற்றிய சரியானதும், நுட்ப திட்பம்ஆனதொரு விளக்கமேயாகும். உண்மையான அன்பானது புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதைஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சாதாரண மனக்கிளர்ச்சிகளில் அல்ல. அன்பு
- Published in Article – By Points
குண நலன்கள்
சகிப்புத்தன்மை அனைத்து குணங்களின் மகுடமாகும் தைரியம் அனைத்து குணங்களின் இதயமாகும் உண்மை அனைத்து குணங்களின் அஸ்திவாரமாகும் அன்பு அனைத்து குணங்களின் அரசியாகும் அமைதி அனைத்து குணங்களின் அரசனாகும் மன உறுதி அனைத்து குணங்களையும் கொண்டு வருவதாகும் நேர்மை அனைத்து குணங்களின் குருவாகும் மலர்ந்தமுகம் அனைத்து குணங்களின் சான்றாகும் எளிமை அனைத்து குணங்களின் அழகாகும் இனிமை அனைத்து குணங்களின் நறுமணமாகும் திருப்தி அனைத்து குணங்களின் சொரூபமாகும் உள்நோக்குமுகம் அனைத்து குணங்களின் திறவுகோலாகும் தூய்மை அனைத்து குணங்களின் தாயாகும் பொறுமை
- Published in Article – By Points
நினைவில் கொள்ளவேண்டியவை !
மகிழ்ச்சியைப் போன்றதொரு நல்ல உணவும் இல்லை மற்றும் கவலையைப் போன்றதொரு மோசமான பிணியும் இல்லை. நீங்கள் எந்தஅளவு அதிகமாக கடவுள் மீது அன்பு செலுத்துவீர்களோ, அந்தஅளவு அவர் உங்களுடைய ஆதரவாக இருப்பார். இலட்சியமற்ற வாழ்க்கை என்பது மதிப்பற்ற வாழ்க்கை ஆகும் . தனது வீண் எண்ணங்களை நிறுத்தத் தெரிந்தவரால் பிறரது எண்ணங்களை அறிய இயலும். தன்னுடைய புலன்களை அடக்கி ஆள்பவரே உண்மையான அரசன். உயர்வான செயல்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பானதாக ஆக்குகிறது. சத்தியத்தை நேசிப்பவர்கள் கடவுளால்
- Published in Article – By Points
போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளும்போது பரபரப்பின்றி அமைதியாக இருப்பதற்கு நினைவில் கொள்ளவேண்டியவை:
நன்றி: The World Renewal, Magazine இது உங்களது ‘கர்மம்’ என்று நினையுங்கள்! உங்களுடன் நீங்கள் இருப்பதை அனுபவிக்கும் ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்று நினையுங்கள். போக்குவரத்தின் வேகம் குறையும்பொழுது உங்களது எண்ணங்கள் குறைவானதாக கற்பனை செய்யுங்கள். பிரேக்கை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், எதிர்மறையான எண்ணங்களுக்கு பிரேக் போடுவதாக கற்பனைசெய்யுங்கள் . எனது எண்ணங்கள் வேகமாக இருப்பின், பயணம் நீண்டதாகத் தோன்றும். எனது கவலைகள் எனது இலக்கை விரைவாகச் சென்றடையச் செய்யுமா என்று உங்களை நீங்களே
- Published in Article – By Points
- 1
- 2